இரும்புக்கால புதைவிடப்பகுதியானது கடனாநதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது.
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி
இடம்: #கல்யாணிபுரம் (ஆழ்வார்குறிச்சி)
மாவட்டம் :தென்காசி
வட்டம் : தென்காசி
#கல்யாணிபுரம் கிராமானது ஆழ்வார்குறிச்சியில் இருந்து சிவசைலம் செல்லும் வழியில் 6 கி.மீட்டர் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது.
காலம் : இரும்புக்காலம் பொது ஆண்டுக்கு முன் 3ம் நூற்றாண்டு முதல் - பொது ஆண்டுக்கு 3ம் நூற்றாண்டுக்குள் (3BCE - 3CE)
#கல்யாணிபுரம் கிராமத்தின் இரும்புக்கால புதைவிடப்பகுதியின் எச்சங்கள் அக்கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் இரும்புக்கால புதைவிடப்பகுதி காணப்படுகிறது. தொல்லியல் எச்சங்களாக முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு, சிவப்பு, கருப்பு மட்பாண்டங்கள், இரும்பிலான பொருள்கள் போன்றவைகள் கிடைக்கின்றன. இந்த இரும்புக்கால புதைவிடப்பகுதியானது கடனாநதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. மேலே காணப்படுகிற முதுமக்கள் தாழி விவசாயத்திற்காக சீரமைக்கும் பொழுது வெளிப்பட்டது.
Comments
Post a Comment