இப்போது நாம் வழக்கில் உள்ள கடையநல்லூர் என்பது முன்பு 'கடைகால்நல்லூர்' என அழைக்கப்பட்டதாகவும், இது பாண்டியர் அல்லது அதற்குப் பிந்தைய சோழர், விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்திருக்கலாம் .கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை வலுவான பாண்டியர் மற்றும் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்திருக்கலாம். இந்தக் காலக் கல்வெட்டுகளில் வட்டெழுத்து அல்லது ஆரம்பகாலத் தமிழெழுத்துகள் தான் இவை.கால்வாய்கள் வெட்டப்படும்போது,மன்னர்களின் உத்தரவுகள், அக்குளத்திற்கு நீர் வழங்கியவர்கள் அல்லது நிலங்களைத் தானமாக வழங்கியவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்படுவது வழக்கம். எனவே, இந்தக் கல்வெட்டு அட்டைக்குளம் தொடர்பான நீர் மேலாண்மை, நிலக்கொடை அல்லது வரி விலக்கு பற்றிய ஒன்றாக இருக்கலாம்.
பல தமிழக மன்னர்களின் ,குறுநில, மன்னர்களின் ,ஜமீன்தார்கள் அரண்மனைகள் சில இடங்களில்காணக்கிடைக்கிறது .ஆனால்; கோட்டைகள் எதுவும் அதிகம் தமிழ் நாட்டில் முழுமையாகக் காணக்கிடைப்பதில்லை . செஞ்சி ,வேலூர், திருமயம் , சென்னை போன்று சிலக்கோட்டைகள் மட்டுமே தமிழ்நாட்டில் இப்போதும் ஓரளவு நல்ல நிலையில் உள்ளன--இறுதி சோழர்கள் சோழர்கள் காலத்தில் பாண்டியர்களால் கங்கைகொண்ட சோழ புரம் கோட்டை தஞ்சாவூர் ,உறையூர் போன்ற இடங்களில் இருந்த கோட்டைகள் இடித்துத்தரைமட்டம்ஆக்கப்பட்டது அதற்க்கு முன்பே சோழர்களால் பாண்டியர்களின் கோட்டைகள் பல தரைமட்டம் ஆக்கப்பட்டது . சங்ககாலத்தில் இருந்து இருந்துவந்த கோட்டைகள்தமிழ் மன்னர்களுள் நடைபெற்ற இடைவிடாத போர்களின் காரணமாக சிறுக சிறுக அழிந்தன . சேரர்களின் கோட்டைகளும் சோழர்களாலும் பாண்டியர்களால் பலமுறை அழிக்கப்பட்டன .பல குறுநில மன்னர்களின் பண்டயக்கோட்டைகள் அவர்களுக்குள் நிகழ்ந்த தொடர்போர்களால் அழிந்தன .இத்தகைய சூழலில் நாயகர்களுக்குப்பிறகு 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில்முதல் கர்நாடக நவாப் ,சாதத் உல்லாக்கான் ஆட்சியின் போது தமிழகக்கோட்டைகள் 84 என்று வரையறுக்...
திருவாலீஸ்வரம் இவ்வூர் அம்பாசமுத்திரம் வட்டத்தில் மன்னார் கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் கடனாநதிக் கரையில் நெல்வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள சிவன் கோயில் இவ்வூரின் வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு உதவுகின்றது. கடனாநதியின் பெயர் கடம் என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்துள்ளது. கடம் என்றால் பானை அல்லது கலசம் என்று பொருள். இந்நதிநீர் அகஸ்தியர் கையிலிருந்த கலசநீர் என்றும் அகஸ்தியர் இக்கோயிலுக்கு மேற்கேயுள்ள மலையடிவாரத்தில் தங்கியிருந்தார் என்றும் நம்பப்படுகிறது. இக்கோயில் சோழர் காலக் கட்டடக் கலைப்பாணிக்கு கல்வெட்டுகள் இவ்வூரைத் திருவாலீஸ்வரம் என்றும் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோயிலில் சோழர், சோழ பாண்டியர் மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 9-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு இவ்வூரை முள்ளிநாட்டு ராஜராஜவளநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் எனக் குறிப்பிடுகின்றது. பிரம்மதேசம், திருவாலீஸ்வரம் மற்றும் மன்னார்கோயில் ஆ...
Comments
Post a Comment