சிந்துசமவெளியையும் தமிழகத்தையும் இணைத்த ஓர் குழு. தமிழகத்தின் வட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மலைகளின் அடிவாரங்களில் வாழும் லம்பாடியர் எனும் மலையின மக்கள் 30 குடிகள், 15 குடிகள் என வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தளி, பென்னாகரம் ஆகிய இடங்களிலும், பெரியார் மாவட்டத்தில் நாயக்கர் தண்டா, (போமியா தண்டா) தேவலாந்தண்டா, புதுத்தண்டா, புருவந்தண்டா போன்ற இடங்களிலும் வட ஆற்காடு மாவட்டத்தில் செங்கம் பகுதியிலும் சேலம் மாவட்டத்தில் குளத்தூர் பகுதியிலும் ஆங்காங்கே குடியமர்ந்து வாழ்கின்றமையினைக் காண முடிகிறது. லம்பாடியர் எனும் இம்மலையின மக்களைப் பற்றி இன அறிமுகம், உடை, உணவு முறை மற்றும் பழக்கவழக்கங்கள், தொழில்முறை, வழிபாட்டு முறையும் படங்குமுறைகளும், இன்றைய வாழ்வில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் எனும் நிலைகளிலும் அறியலாம்." பெரியார் மாவட்டத்தில் 30, 31, 3.89 - 1.4.89 ஆகிய நாள்களில் தொடர்ந்து நாயக்கர்தண்டா (40 குடிகள்) தேவலாந்தண்டா (7 குடிகள்) புருவந்தண்டா (30 குடிகள்) காலுத்தண்டா (15குடிகள்) புதுத்தண்டா (30 குடிகள்) ஆகியவற்றில் நேரடித் தகவல்கள், தரவுகள் பெற்று அதன் ...
தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள். கல்வெட்டுகள் தேவடிச்சி என்றும் கூறுகின்றன. தளிச்சேரி பெண்டுகள் என்றால் அனைவருமே ஆடல் கற்று நடனமாடியவர்கள் அல்ல. இவர்கள் கோவில் இருந்த பல்வேறு பணிக்காக நியமிக்கப்பட்ட இறைபணியாளர்கள். அதில் சிலரே நடனம் கற்று, ஆடல் மகளிராக இருந்துள்ளனர். சிவ பெருமானை தேவர் என்று அழைப்பது வழக்கம். எனவே, இவர்கள் தேவகணிகையர் என்று அழைக்கப்பட்டனர். வைணவ ஆலயங்களில் இறை பணியில் இருந்தோர் "எம்பெருமானடிகள்" என்று அழைக்கப்பட்டனர். கோவிலில் சடங்கு ஏற்பாடு முதல் தூய்மைப்பணி செய்து, ஆடல் வரை பல்வேறு படிநிலையில் தேவரடியார்கள் இருந்துள்ளனர். ஆனால், ஆடல் புரிந்தவருக்கு மட்டும் உரியதாக தேவதாசி அல்லது தேவரடியார் சொல் மாறிவிட்டது. கல்வெட்டுகளில் குறிப்பிடும் தேவரடியார்கள் அனைவருமே ஆடல் மகளிராக இருக்கவேண்டிய கட்டாயமில்லை. எனவே தான் அரசர் குலம் முதல் வணிகர், உழவுக் குடிகள் என எல்லா சமூகத்தில் இருந்தும் தேவரடியார்கள் இருந்துள்ளனர். இவர்களிடையே தலைமை, பணியாள் என வர்க்க வேறுபாடுகள் இருந்துள்ளதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். தேவரடியார்களுக்குத் தலைக்கோல...
இந்த இடத்தின் பெயர் RIDGE POINT. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இங்கே பொழியும் மழை நீரானது மேற்கு திசையில் விழுந்தால் நேத்ராவதி ஆறு வழியாக அரபிக் கடலில் கலந்துவிடும். கிழக்கு திசையில் விழுந்தால் ஹேமாவதி ஆறு மூலமாக வங்காள விரிகுடாவில் கலந்துவிடும். இயற்கையின் விந்தை
Comments
Post a Comment