Posts

கடையநல்லூர் என்பது 'கடைகால்நல்லூர்'

Image
இப்போது நாம் வழக்கில் உள்ள கடையநல்லூர் என்பது முன்பு 'கடைகால்நல்லூர்' என அழைக்கப்பட்டதாகவும், இது பாண்டியர் அல்லது அதற்குப் பிந்தைய சோழர், விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்திருக்கலாம்  .கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை வலுவான பாண்டியர் மற்றும் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்திருக்கலாம். இந்தக் காலக் கல்வெட்டுகளில் வட்டெழுத்து அல்லது ஆரம்பகாலத் தமிழெழுத்துகள் தான் இவை.கால்வாய்கள் வெட்டப்படும்போது,மன்னர்களின் உத்தரவுகள், அக்குளத்திற்கு நீர் வழங்கியவர்கள் அல்லது நிலங்களைத் தானமாக வழங்கியவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்படுவது வழக்கம். எனவே, இந்தக் கல்வெட்டு அட்டைக்குளம் தொடர்பான நீர் மேலாண்மை, நிலக்கொடை அல்லது வரி விலக்கு பற்றிய ஒன்றாக இருக்கலாம்.

இரும்புக்கால புதைவிடப்பகுதியானது கடனாநதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது.

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி இடம்: #கல்யாணிபுரம் (ஆழ்வார்குறிச்சி) மாவட்டம் :தென்காசி வட்டம் : தென்காசி #கல்யாணிபுரம் கிராமானது ஆழ்வார்குறிச்சியில் இருந்து சிவசைலம் செல்லும் வழியில் 6 கி.மீட்டர் தொலைவில்  இக்கிராமம் அமைந்துள்ளது.  காலம் : இரும்புக்காலம் பொது ஆண்டுக்கு முன் 3ம் நூற்றாண்டு முதல் - பொது ஆண்டுக்கு 3ம் நூற்றாண்டுக்குள் (3BCE - 3CE) #கல்யாணிபுரம் கிராமத்தின்  இரும்புக்கால புதைவிடப்பகுதியின் எச்சங்கள் அக்கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில்  இரும்புக்கால புதைவிடப்பகுதி காணப்படுகிறது. தொல்லியல் எச்சங்களாக முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு, சிவப்பு, கருப்பு மட்பாண்டங்கள், இரும்பிலான பொருள்கள் போன்றவைகள் கிடைக்கின்றன.  இந்த இரும்புக்கால புதைவிடப்பகுதியானது கடனாநதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. மேலே காணப்படுகிற முதுமக்கள் தாழி விவசாயத்திற்காக சீரமைக்கும் பொழுது வெளிப்பட்டது.