Posts

Showing posts from November, 2025

கடையநல்லூர் என்பது 'கடைகால்நல்லூர்'

Image
இப்போது நாம் வழக்கில் உள்ள கடையநல்லூர் என்பது முன்பு 'கடைகால்நல்லூர்' என அழைக்கப்பட்டதாகவும், இது பாண்டியர் அல்லது அதற்குப் பிந்தைய சோழர், விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்திருக்கலாம்  .கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை வலுவான பாண்டியர் மற்றும் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்திருக்கலாம். இந்தக் காலக் கல்வெட்டுகளில் வட்டெழுத்து அல்லது ஆரம்பகாலத் தமிழெழுத்துகள் தான் இவை.கால்வாய்கள் வெட்டப்படும்போது,மன்னர்களின் உத்தரவுகள், அக்குளத்திற்கு நீர் வழங்கியவர்கள் அல்லது நிலங்களைத் தானமாக வழங்கியவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்படுவது வழக்கம். எனவே, இந்தக் கல்வெட்டு அட்டைக்குளம் தொடர்பான நீர் மேலாண்மை, நிலக்கொடை அல்லது வரி விலக்கு பற்றிய ஒன்றாக இருக்கலாம்.